மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.
இந்நிலையில், விஜயகாந்தின் மரண துக்கத்திலிருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. எப்போதும் மக்கள் மனதில் நிலைத்திருக்கக்கூடிய விஜயகாந்தின் கடைசி நாளில் என்ன ஆனது என்பதை பற்றி முதல் முறையாக பேசியுள்ளார் அவரது மனைவி பிரேமலதா.
அதாவது, 2014 ஆம் ஆண்டிலிருந்து விஜயகாந்த் இறப்பு வரை எத்தனையோ முறை உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளேன். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றோம். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள், மருத்துவமனையில் தங்கினோம். திடீரென்று 28ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கேப்டன் கையை பிடித்துக்கொண்டு ஒன்றும், ஆகாது வீட்டிற்கு சென்று விடுவோம் என்றேன். அவர் நான் கூறியதை கேட்டாலும், மூச்சு விட சிரமப்பட்டார். மருத்துவர்கள் இந்த முறை மிகவும் கஷ்டம் அனைவருக்கும் சொல்லிவிடுங்கள் என்றார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் விஜயகாந்தின் உயிர் பிரிந்து விட்டது. இதுதான் அன்றைக்கு விஜயகாந்த்க்கு நடந்தது என்று பிரேமலதா உருக்கமாக பேசியுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.