டிசம்பர் 28 கேப்டனின் கடைசி நிமிடங்கள்; நடந்தது என்ன?.. முதன்முறையாக கூறிய பிரேமலதா..!

Author: Vignesh
25 January 2024, 5:51 pm
Quick Share

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.

vijayakanth-updatenews360

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.

vijayakanth-updatenews360

இந்நிலையில், விஜயகாந்தின் மரண துக்கத்திலிருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. எப்போதும் மக்கள் மனதில் நிலைத்திருக்கக்கூடிய விஜயகாந்தின் கடைசி நாளில் என்ன ஆனது என்பதை பற்றி முதல் முறையாக பேசியுள்ளார் அவரது மனைவி பிரேமலதா.

vijayakanth-updatenews360

அதாவது, 2014 ஆம் ஆண்டிலிருந்து விஜயகாந்த் இறப்பு வரை எத்தனையோ முறை உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளேன். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றோம். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

vijayakanth-updatenews360

இரண்டு நாட்கள், மருத்துவமனையில் தங்கினோம். திடீரென்று 28ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கேப்டன் கையை பிடித்துக்கொண்டு ஒன்றும், ஆகாது வீட்டிற்கு சென்று விடுவோம் என்றேன். அவர் நான் கூறியதை கேட்டாலும், மூச்சு விட சிரமப்பட்டார். மருத்துவர்கள் இந்த முறை மிகவும் கஷ்டம் அனைவருக்கும் சொல்லிவிடுங்கள் என்றார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் விஜயகாந்தின் உயிர் பிரிந்து விட்டது. இதுதான் அன்றைக்கு விஜயகாந்த்க்கு நடந்தது என்று பிரேமலதா உருக்கமாக பேசியுள்ளார்.

Views: - 208

0

0