அம்பிகாவும் நானும் ஒரே வீட்ல… Shooting Spot’ல கூட நடந்திருக்கு – நடிகர் ரவிகாந்த் பரபரப்பு பேட்டி!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அம்பிகா. தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலமாக புகழின் உச்சத்திற்கே சென்றார் நடிகை அம்பிகா.

இவர் 1998ல் பிரேம்குமார் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இதனிடையே அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.

அம்பிகா தனது மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் நடிகை அம்பிகா கணவர் பிரேம்குமாரை விவாகரத்து செய்த பிறகு நடிகர் ரவிகாந்துடன் தொடர்ந்து காதல் கிசுகிசுக்கப்பட்டார். மேலும், இருவரும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக கூட செய்திகள் வெளியாகி பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.

இந்த நிலையில் அம்பிகாவுடனான கிசுகிசு செய்திகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் நடிகர் ரவிகாந்த் வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அது பற்றி பேசிய அவர் அம்பிகாவும் நானும் பல படங்களில் கணவன் மனைவியாக நடித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் பக்கத்து வீட்டில் இருந்ததால் ஒன்றாகவே படத்தின் சூட்டிங்கிற்கு செல்வோம்.

இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கிறோம் என்றால் ஒன்றாகவே ஷூட்டிங்கிற்கு பைக்கில் சென்று வருவது என இருந்து வந்தோம். எங்களை இப்படி பார்த்ததால் பத்திரிக்கையாளர்கள் தவறான செய்திகளை எழுதி விட்டார்கள். எனவே இந்த கிசுகிசு செய்திகள் உண்மையை இல்லை . இதனால் அம்பிகா மிகவும் பாதிக்கப்பட்டார்.

அந்த பொண்ணு பாவம் கல்யாணம் பண்ணி அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டாங்க அவங்களோட கணவர் பிரேம்குமார் தான். ஆனால், பல பேர் ரவிகாந்த் தான் அம்பிகாவின் கணவர் என்று கூறினார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் இருவரும் வந்து இறங்கிய உடனே…. இதோ புருஷன் பொண்டாட்டி வந்துட்டாங்க.. என்று கூறுவார்கள் .

நான் நிறைய நடிகைகளுடன் நடித்திருக்கிறேன் .அப்படி பார்த்தால் எல்லாருக்கும் கணவராக ஆகிவிட முடியுமா? நடிகர்களை பற்றி கிசுகிசு எழுதுங்கள்… அது உண்மையா? பொய்யா? என்று தெரியாமல் எழுதி அடுத்தவர்களின் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள். தயவு செய்து எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் என நடிகர் ரவிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

Anitha

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

13 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

14 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

15 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

15 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

16 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

16 hours ago

This website uses cookies.