தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன், பல வெற்றிப்படங்களை தந்தவர் வேட்டையாடு விளையாடு,விண்ணைத்தாண்டி வருவாயா,காக்க காக்க,வாரணம் ஆயிரம்,வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இயக்குனராக மட்டுமின்றி, கடந்த சில வருடமாக நடிகராகவும் கௌதம் மேனன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவருகிறார்.லியோ,விடுதலை,கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் அவர் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
அவரின் அழுத்தமான மற்றும் தனித்துவமான நடிப்பு,அவருடைய குரல்வளம் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையும் படியுங்க: 2024-ல் மிரட்டிய TOP 5 வில்லன்கள்…கோடிகளை அள்ளிய பிரபல நடிகர்கள்..!
இப்போது கௌதம் மேனன், தனக்கே உரிய கதையை எழுதி இயக்குவது என்ற பாரம்பரியத்தை மாற்றி, வெற்றிமாறன் எழுதிய கதையை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார். இது தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தாயாருக்கிறது முதலில், படத்தின் கதாநாயகனாக சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது.
ஆனால், கௌதம் மேனன் மற்றும் சிம்பு இடையே கடந்த 2 வருடமாக பேச்சுவார்த்தை இல்லையென்று கூறப்படுகிறது .அதுமட்டுமல்லாமல் சிம்பு ஏற்கனவே நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாலும், ஜெயம் ரவி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.