டிவியில் பிரபலமாகி சினிமாவில் கால் பதித்த சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளதால் அவர் இடத்தை எஸ்கே நிரப்புவார் என நம்பப்படுகிறது.
அதுக்கு ஏற்றார் போல கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுத்த காட்சி கோலிவுட் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
தற்போது தீபாவளியை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் குறித்த வாழ்க்கை படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எகிறியது.
இதையும் படியுங்க: தவெகவுக்கு தாவும் பிரபல நடிகை? பாஜகவுக்கு டாட்டா காட்டுகிறாரா?
அதன்படியே படம் தீபாவளிக்கு வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. 2 நாள் வசூல் நிலவரம் பாக்ஸ் ஆபிஸ்சை அதிர வைத்துள்ளது.
முதல் நாள் வசூலில் அமரன் படம் கெத்து காட்டியுள்ளது. கோட் படம் முதல் நாள் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ரூ.38 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் அமரன் திரைப்படம் 42.3 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இன்னொரு விஷயம் என்னவென்றால் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் முதல் நாள் வசூலை அமரன் முறியடித்துள்ளது.
அதே தனுஷின் ராயன் திரைப்படம் கூட முதல் நாள் இந்த வசூலை செய்யவில்லை. அமரன் படம் அதை முறியடித்துள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். விஜய் சொன்னது போல் அந்த இடத்தில் எஸ்கே தான் என்றும் நெடிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.