சினிமா / TV

கோடி கோடியா கொட்டும் வசூல்… பஞ்சத்தில் அடிபட்டது போல் பரிசு கொடுத்த SK – யாருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன்னர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் இருந்து வந்தார்.

இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய போது நடனம் காமெடி டைமிங் டயலாக் உள்ளிட்ட தன்னுள் ஒளிந்திருந்த பல திறமைகளை வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதன் மூலம்தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. அதை மிகச் சரியாக ஆரம்பத்தில் இருந்தே பயன்படுத்திக்கொண்டார். சிவகார்த்திகேயன் முதல் முதலில் 2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் இவர் நடிகராக அறிமுகம் ஆனார் .

முதல் திரைப்படமே இவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்து அவரது நடிப்பை பலரும் பாராட்டினார்கள். இதனால் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வந்தது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற 3 திரைப்படத்தில் தனுஷின் நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார் .

அதை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா,எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் , மான் கராத்தே , காக்கிசட்டை, ரஜினி முருகன் , வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் ,மாவீரன் , அயலாம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த ராணுவ வீரரானின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எமோஷ்னலாக டச் செய்துவிட்டார். இந்த திரைப்படம் வெளிவந்து இதுவரை 200 கோடி வசூலை எட்டி விட்டதாக சமீபத்திய தகவல்கள் கிடைத்திருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயனின் திரைப்பட கெரியரிலே இந்த திரைப்படம் தான் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

இப்படியாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த இந்த திரைப்படத்திற்கு தற்போது வெற்றி விழா தொடர்ந்து நடத்தப்பட்டு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் . இந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் செய்துள்ள ஒரு சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது

அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷுக்கு அமரன் படத்தின் வெற்றியால் நெகிழ்ந்து போய் அவருக்கு வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். அந்த வாட்சின் விலை ரூ. 122355.57 என்பது குறிப்பிடத்தக்கது.

கோடி கோடியாய் வசூல் ஈட்டி ரூ.200 கோடி நெருங்கி இருக்கிறது அமரன் படத்தின் வசூல். இதற்கு மிக முக்கிய பங்களிப்பாளராக படத்தின் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் இருக்கிறார் . அப்படி இருக்கும்போது அவருக்கு ஏதேனும் விலை உயர்ந்த கார் பரிசாக கொடுக்காமல் சிவகார்த்திகேயன் இப்படி ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசாக கொடுத்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

முன்னதாக ரஜினி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளரான அனிருத்தற்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் லக்சரி கார் ஒன்றே கொடுத்து அவரை மகிழ்ச்சி அடைய வைத்தார்.

அனிருத்துக்கு மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் உள்ளிட்டோருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் மிகப்பெரிய சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது. எனவே அவர்களை எல்லாம் பார்த்து சிவகார்த்திகேயன் கற்றுக் கொள்ள வேண்டும். தனக்காக பணியாற்றி போடி கோடியாய் வசூல் ஈட்ட மிக முக்கிய காரணமாக இருந்த தன்னுடைய பட குழுவினருக்கு அவர் ஒரு கோடி ரூபாயில் பரிசு கொடுத்தால் அது தகும் என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.