படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.
அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள், பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
படத்திற்கு படம் தனது முழு உழைப்பை போட்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்காக தனது இயக்குனர் எப்படி கேட்கிறாரோ அப்படி உடலை வருத்தி திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் விக்ரம். திரைத்துறையில் போட்டிகள் பொறாமைகள் இன்றி ஜீரோ ஹேட்டர்ஸ் என்ற பெயரெடுத்திருக்கிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தங்கலான் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, விக்ரம் தற்போது தன்னுடைய 62வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை அருண்குமார் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் இயக்கிய சித்தர் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அருண்குமார் இயக்கத்தில் சீயான் 68 படத்தின் அறிவிப்பு வீடியோ கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சீயான் 62 படம் குறித்து தற்போது மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்து வருவதாகவும், தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் எஸ்.கே.சூர்யா ஒருபுறம் நடிப்பு என்று வந்துவிட்டால் எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்து நிற்கும் விக்ரம் என இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இதனால் சீயான் 62 படத்தின் மீது அளவு கடந்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. முதன்முறையாக இணைந்துள்ள இந்த காம்போ எந்த அளவிற்கு மக்கள் வரவேற்பை பெறப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.