பக்கத்து வீட்டிலுள்ள காரை தாடி பாலாஜியின் மனைவி கல்லால் அடித்து உடைத்தார் என்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நித்யா தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
90களில் தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகராக இருந்தும், வடிவேலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடிகர் தாடி பாலாஜி கலக்கியவர். நடிகர் தாடி பாலாஜியின் யதார்த்தமான நடிப்பால் இவருக்கென பல ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். இவரின் காதல் மனைவி நித்யாவும் பாலாஜிக்கும் உள்ள சண்டை உலகறிந்த செய்தியாக மாறிவிட்டது.
இந்த நிலையிலும் இவர்களுக்கு போஷிகா என்ற பெண்குழந்தை உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள் என பிரபல தொலைக்காட்சியால் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியின் மூலம் தான் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனை தொடர்ந்து நித்யாவும் பாலாஜிக்கும் இடையேயான சண்டைகள் எல்லைமீறிய நிலையில் கோர்ட், போலிஸ் என மிகவும் வைரலான நிலையில் இருவரும் சமீபகாலமாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் போஷிகாவுடன் தனியாக வாழ்ந்து வரும் நித்யா, பக்கத்து வீட்டிலுள்ள வயதான ஆசியர் ஒருவரின் காரை “நள்ளிரவில் கல்லால் அடித்து உடைத்ததாக” வழக்கு பதிவு செய்யப்பட்டு , விசாரனைக்காக நித்யா கைது செய்யப்பட்டது பெரும் வைரலானது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில் என்ன நடந்தது என சரியாக தெரியாமல் விமர்சகர்கள் கண்ட மாதிரி செய்திகளை பரப்பி வந்த நிலையில், இதற்கு நித்தியா பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், “ அந்த வயதான ஆசியருக்கும் எனக்கும் ஏற்கெனவே சரி வராது என்றும், இதனால் அவர்களுடன் நான் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை எனவும், எனக்கும் என்னுடைய கணவருக்கும் பிரச்சனை நடக்கும் போது முழுக்க முழுக்க இவர்தான் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து அவரை பாலாஜிடம் இருந்து என்னை பிரித்தார்கள்.
மேலும் தன்னுடைய வீட்டில் நடக்கும் விசயங்களை தவறாக பாலாஜிக்கு சொல்வதே இந்த வயதான ஆசிரியர் தான். பாலாஜி தன்னை அடித்த போது நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். இதன்போது எனக்கு பலத்த கோபம் வந்ததால் இவரை அவதூறாக பேசியது உண்மை என நித்யா தெரிவித்தார்.
இதுகூறித்து மேலும் பேசிய நித்யா இப்போது இவரின் காரை உடைத்ததாக ஒரு பொய்யான தகவலை பரப்பியுள்ளார். ஆனால் இது உண்மையல்ல அந்த வீடியோ காட்சியில் இருப்பது நான் தான் என்றும், நான் “துணிவு” திரைப்படம் பார்ப்பதற்கு செல்லும் போது பதிவான காட்சி தான் அது என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுக்கான ரிவன்ஜ் எடுத்தே தீருவேன் எனவும், நானும் வழக்கு பதிவு செய்யப்போகிறேன் என பல கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நெட்டிசன்கள் இணையத்தில் தற்போது வைரலாக பரப்பி வருகிறார்கள். மேலும் குடும்ப பிரச்சினையால் ஏற்படும் விளைவுகள் என கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.