நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்திருந்த நிலையில், 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் அந்த கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார். அந்த வகையில், தற்போது சிஏஏ சட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு எதிராக தனது குரலை எழுப்பியுள்ளார். அதில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்”. என அறிக்கை ஒன்றை த.வெ.க கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
3 வரியில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டது கூட ஒரு விதத்தில் ஓகே என்று சொல்லலாம். ஆனால், இந்த அறிக்கையில் எந்த அரசு சட்டத்தை கொண்டு வந்தது. யார் கொண்டு வந்தார்கள் என்று கூட இல்லை, ஏன் கண்டனம் என்ற வார்த்தை கூட இல்லாமல் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பது நெட்டிசன்களிடையே, கேலிக்கு உண்டாகியுள்ளது. முக்கியமாக, இந்த சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு, விஜய் ஒரு வார்த்தை கூட மத்திய அரசை எதிர்க்கவில்லை. மாறாக இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று மாநில அரசுக்கு விஜய் கோரிக்கை விடுத்துள்ளது தற்போது விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், இந்த சட்டத்திற்கு எதிராக திமுகவினர் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து விட்டனர். அதேபோலத்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த சட்டத்தை தொடர்ந்து எதிர்த்தும் வருகிறார். தமிழ்நாட்டில், இதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வருகிறார். அப்படி இருக்கையில், மத்திய அரசை விமர்சிக்காமல் மாநில அரசை விஜய் விமர்சனம் செய்வது ஏன் என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது. விஜய் இன்னும் தீவிரமாக ஆராய்ந்து அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம் என்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பற்றி படித்துவிட்டு பேசியிருக்கலாம் பொத்தம் பொதுவாக இப்படி அறிக்கை வெளியிடுவது சரியா என்று நெட்டிசன்கள் விஜயை விமர்சித்தும் வருகின்றன.
இந்நிலையில், மார்க் ஆண்டனி பட தயாரிப்பாளரான வினோத்குமார் விஜயின் அறிக்கையை குறித்து விமர்சித்துள்ளார். அதில், ஒரு நடிகனாக மட்டுமே அவர் மீது காதல் உள்ளது என்றும், அவருக்கு அரசியல் ஆதரவு இல்லை. அவருடைய அரசியல் பயணம் குறித்து எனக்கு கவலையாக உள்ளது. புஸ்ஸி ஆனந்த் போன்றவர்கள் அவருடன் இருந்து எதுவும் சாதிக்க போறது இல்லை என்று வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். இந்த எக்ஸ் தள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.