சினிமா / TV

ரொம்ப நல்லவ மாதிரி நடித்த சாச்சனா… நீ இதுக்கு தான் வந்தியா? திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிறு கிழமை துவங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. முதல் நாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் உள்ளே போன பிறகு விஜய் சேதுபதி ஒரு பேரதிர்ச்சி கொடுத்தார்.

அதாவது அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் நடைபெற இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு இரண்டாவது ஆளாக சென்ற போட்டியாளரான சாச்சனா ஆண்களுக்கு எந்த பக்கம்? பெண்களுக்கு எந்த பக்கம்? என்ற முடிவெடுக்கும் இடத்தில் சாச்சனாவும் இருந்தார் .

நாங்கள் ஒரு பெரிய அறை உங்களுக்கு விட்டுக் கொடுக்கிறோம். ஆனால், அதற்கு பதில் ஒரு வாரம் மட்டும் ஆண்களை பெண்கள் யாரும் நாமினேட் செய்யக்கூடாது என கண்டிஷன் போட்டனர். அதற்கு பெண்களும் ஒப்புக் கொண்டு டீல் போட்டனர்.

ஆனால், அதற்குப் பின் வந்த ஜாக்லின் அந்த கண்டிஷனை ஏற்றுக் கொள்ளவே முடியாது என பிடிவாதமாக இருந்தார். இது அடுத்த சாச்சனா பேசும் போது நான் வெளியே போனாலும் பரவாயில்லை அந்த முடிவு எடுத்த பெண்களின் நான்கு பேரில் நானும் ஒருத்தி ஒரு வேலை பெண்களை மட்டும் நாம் ஏன் எலிமினேட் செய்யும் நிலை வந்தால்… அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு பெண் வெளியே போக வேண்டும் என்றால் அது நான் ஆக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என வெளிப்படையாக கூறினார்.

அதன் பிறகு 24 மணி நேர எலிமினேஷனுக்கு பலரும் அதை காரணம் காட்டி நாமினேட் செய்தனர். அதிகம் பேர் நாமினேட் செய்யப்பட்ட சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் அவர் வாய் விட்டு தானாகவே வெளியேறி விட்டார். இதை கேள்விப்பட்ட நெட்டிசஸ் பலரும் நீ இப்படி விட்டுக் கொடுக்க தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தியா?

இதையும் படியுங்கள்:Bigg Boss வீட்டில் தஞ்சம் அடைந்த கள்ளக்காதல் ஜோடி… வெளுத்து வாங்கிய முன்னாள் மனைவி!

விட்டுக் கொடுத்து நல்ல பெயர் எடுப்பதற்கு இங்கே யாரையும் கூப்பிடல. நல்லவர் போல் வேஷம் போட்டு டைட்டில் வெல்ல முடியாது. போட்டியில் இறங்கி விளையாடி வெற்றி பெற்றால் மட்டும் போதும் என நெட்டிசன்ஸ் கருத்துக்களை கூறி வருகிறார். மேலும் சாச்சனா வெளியேறிய விவகாரத்தில் விஜய்சேதுபதியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.