நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.
இந்த திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள்.
இதனிடையே, 2007ல் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு படம் Aadavari Matalaku Arthale Verule. அதில் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்து இருந்தனர்.
Aadavari Matalaku Arthale Verule படம் தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் நடித்து இருந்தனர். 2013ல் Aadavari Matalaku Arthale Verule படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க விரும்புவதாக செல்வராகவன் ட்விட்டரில் த்ரிஷாவிடம் கேட்டிருக்கிறார்.
இதனிடையே, 10 வருடங்கள் கழித்து செல்வராகவனுக்கு தற்போது, ட்விட்டரில் த்ரிஷா பதில் கூறி இருக்கிறார். நான் ரெடி என அவர் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே, செல்வராகவன் பல sequel படங்களுக்கு தயாராகி வரும் நிலையில், அந்த லிஸ்டில் யாரடி நீ மோகினி படமும் இணைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.