நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.
இந்த திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள்.
இதனிடையே, 2007ல் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு படம் Aadavari Matalaku Arthale Verule. அதில் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்து இருந்தனர்.
Aadavari Matalaku Arthale Verule படம் தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் நடித்து இருந்தனர். 2013ல் Aadavari Matalaku Arthale Verule படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க விரும்புவதாக செல்வராகவன் ட்விட்டரில் த்ரிஷாவிடம் கேட்டிருக்கிறார்.
இதனிடையே, 10 வருடங்கள் கழித்து செல்வராகவனுக்கு தற்போது, ட்விட்டரில் த்ரிஷா பதில் கூறி இருக்கிறார். நான் ரெடி என அவர் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே, செல்வராகவன் பல sequel படங்களுக்கு தயாராகி வரும் நிலையில், அந்த லிஸ்டில் யாரடி நீ மோகினி படமும் இணைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.