10 வருடம் கழித்து அந்த விஷயத்திற்குக்கு ஓகே சொன்ன த்ரிஷா.. மகிழ்ச்சியில் வாரிசு நடிகர்…!!

Author: Vignesh
16 September 2023, 1:30 pm
trisha - updatenews360 1
Quick Share

நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.

இந்த திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள்.

Trisha_UpdateNEws360

இதனிடையே, 2007ல் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு படம் Aadavari Matalaku Arthale Verule. அதில் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்து இருந்தனர்.

Aadavari Matalaku Arthale Verule படம் தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் நடித்து இருந்தனர். 2013ல் Aadavari Matalaku Arthale Verule படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க விரும்புவதாக செல்வராகவன் ட்விட்டரில் த்ரிஷாவிடம் கேட்டிருக்கிறார்.

இதனிடையே, 10 வருடங்கள் கழித்து செல்வராகவனுக்கு தற்போது, ட்விட்டரில் த்ரிஷா பதில் கூறி இருக்கிறார். நான் ரெடி என அவர் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே, செல்வராகவன் பல sequel படங்களுக்கு தயாராகி வரும் நிலையில், அந்த லிஸ்டில் யாரடி நீ மோகினி படமும் இணைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Views: - 239

0

0