துணிவு VS வாரிசு… எந்தப் படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா..? உதயநிதி ஸ்டாலின் சொன்ன முக்கிய அப்டேட்!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் தீயாக நடைபெற்று வருகிறது. இவர் படமும், விஜய்யின் ‘வாரிசு’ படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘துணிவு’ படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் இணைந்துள்ளனர். இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

அதே போல் ‘பீஸ்ட்’ படத்தினை தொடர்ந்து ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். வம்சி பைடிபல்லி இயக்கியுள்ள இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான ரஞ்சிதமே பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்தப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது இப்போதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் ‘வாரிசு’ படத்தினை விட இந்தப்படத்திற்கு தான் அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகி வந்தது.

இந்நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, சில முறை அஜித் சார், விஜய் சார் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகியுள்ளன. துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள், ஸ்க்ரீன்கள் தான் ஒதுக்கப்படும். துணிவு படத்தின் தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான வர்த்தகம் 4 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.