லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’. இந்தத் திரைப்படம் டிசம்பர் 30,2022 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த ராங்கி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக அறிமுகமானவர் அனஸ்வரா ராஜன்.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சுஜாதா என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மஞ்சுவாரியாரின் மகளாக அனஸ்வரா ராஜன் நடித்திருந்தார். அதன் பிறகு, இவர் தண்ணீர் மாத்தன் தினங்கள் படத்தின் மூலம் அதிக கவனம் பெற்றார். இந்த படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து இப்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ளார். இதை அடுத்து, இவருக்கு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அனஸ்வரா ராஜன் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்து உள்ளார். அதில், அவர் நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, நான் பேருந்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒருத்தர் என் முன்னாடி உட்கார்ந்து சுய இன்பம் செய்து கொண்டிருந்தார். அந்த வயது என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.
மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
அந்த நபர் எதற்கு என்னிடம் அதை காட்டினார் என்பது கூட தெரியவில்லை. இப்போது, அந்த சம்பவத்தை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைகளும் அப்படி நடந்து கொண்ட இவர் எந்த மாதிரியான மனிதர் எப்படி பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அந்த விஷயத்தை யோசித்துப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்று அனஸ்வரா கூறியுள்ளார்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.