தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு பெரியளவில் காமெடி நடிகராக புகழப்பட்டவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்ற பெருமையோடு தமிழில் கொடிக்கட்டி பறந்த வடிவேலு சில அரசியல் பிரச்சனைகளில் சிக்கியும் சங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையாலும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு சினிமாவை விட்டு ஒதுக்கப்பட்டார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
தற்போது அந்த பிரச்சனைகளை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் வைகைப்புயல். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறாராம். அப்படி இருக்கையில் சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் வேலையாக இடையில் சென்றுவிட்டாராம். மேலும் சந்திரமுகி 2வில் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லையாம்.
மீண்டும் ரெட் கார்ட்
இயக்குனர் பி வாசுவிடமும் எடக்குமுடக்காக பேசி வருகிறாராம். இதனை அறிந்த லைக்கா நிறுவனம் சந்திரமுகி 2 முடிந்தப்பின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்க்கு வாருங்கள் என்று பஞ்சாயத்து பேசி அனுப்பி வைத்துள்ளாராம். இரு படத்தையும் லைக்கா தான் தயாரிப்பதால் அதையும் காதில் வாங்காதபடி சென்றுள்ளாராம் வடிவேலு.
ஏற்கனவே சங்கர் தயாரித்த படத்தில் இப்படித்தான் வடிவேலு நடந்து கொண்டார். மீண்டும் அதேபோல் வடிவேலு செய்து வருவது மீண்டும் ரெட் கார்ட் போடுவதற்கு ஆச்சரியமே இல்லை என்று கோலிவுட் முழுக்க பேசுபொருளாக மாறி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.