தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
அண்மையில் கூட பிதாமகன் மகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிவிட்டு அவரை ஏமாற்றிவிட்டதாக கூறினார். இந்நிலையில் தற்போது பாலா சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நடிக்க கேரளாவில் இருந்து சில துணை நடிகைகள் 3 நாள் படப்பிடிப்புக்கு ரூ 22,000 சம்பளம் என்று பேசி அழைத்து வந்த்துள்ளனர். ஆனால், அவர் கூறியபடி சம்பளம் கொடுக்காததால் முறையிட்டு கேட்டதற்கு துணை நடிகைகளை அடித்து கடுமையாக தாக்கி இருக்கிறார் அப்படத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜிதின்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நடிகை லிண்டா என்பவர் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் ஜிதின் மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து பாலா படத்தில் இது போன்ற சர்ச்சையான காரியங்கள் நடந்து வருவதால் அவர் மீது ரசிகர்கள் வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.