நீயெல்லாம் உயிர் நண்பனு சொல்லிக்காதே… சஞ்சீவ் உடன் 6 மாதம் பேசாமல் இருந்த விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு நண்பர்கள் கூட்டம் மிகக்குறைவாகவே உள்ளது. இவருக்கு கல்லூரி படித்தபோது ஏற்பட்ட நட்பு வட்டாரத்தில் ஒரு சில நண்பர்கள் தான் இப்போது இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் சஞ்சீவ். சஞ்சீவ் திருமதி செல்வம் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

தொடர்ந்து விஜய்யின் நண்பராக அவரது பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சியம் ஆனார். முதன் முதலில் 2002ம் ஆண்டு உருவான மெட்டி ஒலி சீரியல் மூலம் அவர் சின்னத்திரை வழியாக அனைவரது குடும்பத்திலும் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

அதன் பின்னர் சீரியல்களில் நடிப்பதை அறவே நிறுத்திவிட்டு திரைப்படங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்து நடித்தார். ஆனால் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் விஜய் – சஞ்சீவ் நெருக்கமான உயிர் நண்பர்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் விஜய் ஒரு முறை சஞ்சீவ் உடன் சண்டைபோட்டு சுமார் 6 மாதம் பேசாமல் இருந்துள்ளார்.

அதற்கான காரணம் என்னவென்றால், டிவி சேனல் ஒன்றில் விஜய்யின் நண்பர்கள் எல்லோரும் பங்கேற்ற அதில் சஞ்சீவும் அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், திருமதி செல்வன் ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் வரமுடியாது என மறுத்ததால் விஜய் அவர் மீது கோப்பட்டு 6 மாசம் சஞ்சீவ் உடன் பேசவே இல்லையாம். பல வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த செய்தி தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.