“ஒரு பொண்டாட்டி, ஒரு புள்ளைய வச்சு சமாளிக்கிறதே பெரிய விஷயம்”… இதுல இது வேறயா?.. கடுப்பான எஸ்.ஏ.சந்திரசேகர்..!

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜயை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார். புரட்சி இயக்குனர் என அழைக்கப்படும் அளவிற்கு அவர் எடுத்த பெரும்பாலான படங்கள் சட்டம் சார்ந்தவையாகவும், புரட்சிக் கருத்துக்களை அடிப்படையாக கொண்டும் அமைந்திருக்கும். விஜயகாந்தை வைத்து தான் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.

தளபதியின் இந்த உச்சத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜயின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான். அந்த அளவிற்கு ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் தளபதி விஜய்யை வைத்து 7 படங்களை கொடுத்து எடுத்து தூக்கிவிட்டார்.

பல கஷ்டங்களில் இருந்தாலும் கூட விஜய்க்கு பக்க பலமாக இருந்த எஸ் ஏ சி-க்கும், விஜய்க்கும் இடையில் தற்போது சண்டை இருந்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என்றாலும் விமர்சனங்களும் அவ்வப்போது எழுந்து வந்தது. ஆனால் தங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான் என எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

சமீபத்திய பேட்டியொன்றில் பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ் ஏ சந்திரசேகர் பேசிய போது தனது குடும்பம் குறித்த முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அனுமதியின்றி, அவரது நற்பணி மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை, எஸ்ஏசி அரசியல் பக்கம் திருப்ப நினைத்ததாக சொல்லப்பட்டது குறித்தும், இதனால்தான் இவர்கள் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர், பேசிய போது ஒரு பொண்டாட்டி, ஒரு புள்ளைய வச்சு சமாளிக்கிறதே பெரிய விஷயம். இதுல இதெல்லாம் நமக்கு தேவையா? என பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், இதை சொல்லிவிட்டு அவரே விழுந்து விழுந்து சிரித்தார். பின்பு அது குறித்து விளக்கம் அளித்த எஸ்ஏசி, தான் சாதாரணமாகத்தான் சொன்னேன் என்றும், அதை ஏன் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சேர்க்கிறீர்கள் என பேசி மழுப்பினார். எஸ்ஏசியின் இந்த கருத்துக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

12 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

13 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

14 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

14 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

15 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

15 hours ago

This website uses cookies.