“ஒரு பொண்டாட்டி, ஒரு புள்ளைய வச்சு சமாளிக்கிறதே பெரிய விஷயம்”… இதுல இது வேறயா?.. கடுப்பான எஸ்.ஏ.சந்திரசேகர்..!

Author: Vignesh
27 February 2023, 3:30 pm
SAChandrasekar_Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

SAC-Dhanush-Updatenews360-1

மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜயை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார். புரட்சி இயக்குனர் என அழைக்கப்படும் அளவிற்கு அவர் எடுத்த பெரும்பாலான படங்கள் சட்டம் சார்ந்தவையாகவும், புரட்சிக் கருத்துக்களை அடிப்படையாக கொண்டும் அமைந்திருக்கும். விஜயகாந்தை வைத்து தான் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.

Vijay Ileana - Updatenews360

தளபதியின் இந்த உச்சத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜயின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான். அந்த அளவிற்கு ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் தளபதி விஜய்யை வைத்து 7 படங்களை கொடுத்து எடுத்து தூக்கிவிட்டார்.

பல கஷ்டங்களில் இருந்தாலும் கூட விஜய்க்கு பக்க பலமாக இருந்த எஸ் ஏ சி-க்கும், விஜய்க்கும் இடையில் தற்போது சண்டை இருந்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என்றாலும் விமர்சனங்களும் அவ்வப்போது எழுந்து வந்தது. ஆனால் தங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான் என எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

varisu-thalapathy-vijay-updatenews360

சமீபத்திய பேட்டியொன்றில் பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ் ஏ சந்திரசேகர் பேசிய போது தனது குடும்பம் குறித்த முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அனுமதியின்றி, அவரது நற்பணி மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை, எஸ்ஏசி அரசியல் பக்கம் திருப்ப நினைத்ததாக சொல்லப்பட்டது குறித்தும், இதனால்தான் இவர்கள் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர், பேசிய போது ஒரு பொண்டாட்டி, ஒரு புள்ளைய வச்சு சமாளிக்கிறதே பெரிய விஷயம். இதுல இதெல்லாம் நமக்கு தேவையா? என பேசினார்.

SAC - vijay updatenews360

மேலும் அவர் பேசுகையில், இதை சொல்லிவிட்டு அவரே விழுந்து விழுந்து சிரித்தார். பின்பு அது குறித்து விளக்கம் அளித்த எஸ்ஏசி, தான் சாதாரணமாகத்தான் சொன்னேன் என்றும், அதை ஏன் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சேர்க்கிறீர்கள் என பேசி மழுப்பினார். எஸ்ஏசியின் இந்த கருத்துக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Views: - 496

9

2