சினிமா / TV

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண்

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா 2” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படம் வெளியான நாளுக்கு முந்தைய நாள் இரவு ஹைதராபாத்தில் அமைந்துள்ள சந்தியா திரையரங்கில் இத்திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அந்த நிலையில் இந்த பிரீமியர் காட்சியில் அல்லு அர்ஜூன் கலந்துகொண்டார். இதனால் திரையரங்கு வளாகத்தில் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது மதிக்கத்தக்க  ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அது மட்டுமல்லாது கூட்ட நெரிசலில் காயமடைந்த ரேவதியின் 9 வயது மகன் தேஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

இதனிடையே அல்லு அர்ஜூனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதியின் கணவர் அல்லு அர்ஜூன் மீதான வழக்கை வாபஸ் பெற்றார். இச்சம்பவம் அன்றைய தேதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

விராட் கோலியை கைது பண்ணீங்களா?

இந்த நிலையில் இன்று காலை பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் கூல் சுரேஷ், “ஆர்சிபி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தார்கள். அதற்கு நீங்கள் யாரை கைது செய்ய வேண்டும்? விராட் கோலியை கைது செய்ய வேண்டும். ஆனால் சினிமாக்காரன் மட்டும் உங்களுக்கு இளிச்சவாயன். 

புஷ்பா 2 வெளியானபோது திரையரங்கில் கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்ததற்கு அல்லு அர்ஜூனை கைது செய்தீர்கள். ஒருவர் இறந்ததற்கே அல்லு அர்ஜூனை நீங்கள் கைது செய்யும்போது, பெங்களூரில் 11 பேர் இறந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது விராட் கோலியை நீங்கள் ஏன் கைது செய்யவில்லை? அப்படி என்றால் சினிமாக்காரன் என்றால் உங்களுக்கு இளக்காரமா?” என்று கேள்வி எழுப்பினார். இவரின் பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.