கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. அப்படி அவர் எப்பொழுதாவது வெளியே வந்தால் அவரை காண ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் கூடிவிடுகிறார்கள்.
அவர் கூட்டத்தை பார்த்து கையசைத்தாலே மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். விஜயாந்த் விரைவில் குணமடைந்து பழைய கேப்டனாக வர வேண்டும் என்று ரசிகர்களும், தேமுதிகவினரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேப்டன் தற்போது எப்படி இருக்கிறார். ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் விஜயகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார் யோகி பாபு.
கெத்தா கூலிங் கிளாஸ் அணிந்து கேப்டன் அமர்ந்திருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அந்த வானத்தை போல மனம் படைத்த பாடலை பேக்கிரவுண்டில் ஓடவிட்டிருக்கிறார் யோகி பாபு.
அந்த வீடியோவில் விஜயகாந்த் சிரித்தது தான் அனைவரையும் கவர்ந்துவிட்டது. வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, கேப்டனை சந்தித்த வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி. அந்த குழந்தை சிரிப்பு இருக்கே. அதை தான் மறக்க முடியவில்லை.
அவர் சிரிப்பதை பார்த்து தானாக கண் கலங்குகிறது. சர்க்கரை நோயால் கால் விரல்களை அகறறிவிட்டார்கள். அதனால் வீட்டோடு இருக்கிறார் பாவம் அனைவருக்கும் தன் சொந்த பணத்தில் உதவி செய்பவர் கேப்டன். தங்க மனசுக்காரர். இந்திய சினிமாவின் நிஜமான ஹீரோ கேப்டன் தான் என தெரிவித்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.