திரைத்துறையில் நடிகைகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும், கதைக்கு என்ன தேவையோ, அதையே தாங்கள் செய்து வருகிறோம் என நடிகை அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.
கோவை ராஜவீதி பகுதியில் உள்ள பிரபல தங்க நகை விற்பனை நிறுவனம், சர்வதேச வைர வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் திரைப்பட நடிகை அதுல்யா ரவி புதிய வடிவமைப்பிலான வைர நகைகளை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பெரும்பாலான பெண்களுக்கு வைரம் பிடிக்கும் எனவும், எந்த ஒரு விழா என்றாலும் வைர நகை அணியும் போது பெண்கள் ராணி போன்று இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். தனது நடிப்பில் இதுவரை இரண்டு, மூன்று படங்கள் வெளியாகி உள்ளதாகவும், தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருவதாகவும், தமிழிலும் தான் நடித்த ஒரு படம் விரைவில் வெளியாக உள்ளது, எனவும் கூறினார்.
மேலும், நடிகைகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்ற கருத்து தவறானது எனவும், கதைக்கு எது தேவையோ, அதை மட்டுமே செய்து வருகிறோம் என கூறியதுடன், திரைப்படங்களில் நடிகைகளின் நிறத்தில் எந்த பாகுபாடும் இல்லை எனவும், நல்ல கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும், எனவும் குறிப்பிட்டார்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.