அன்றாடம் என்ன சமையல் செய்ய வேண்டும் என்பதை யோசிப்பதே தாய்மார்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கும். அனைவருக்கும் பிடித்த மாதிரியும் இருக்க வேண்டும், அதே சமயம் எளிமையான சமையலாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தேங்காய் பால் ந
புலாவ். இதனை வெறும் 15 நிமிடங்களில் செய்து விடலாம். இப்போது இதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி- 1கப்
தேங்காய் பால்- 1 1/2 கப்
பச்சை பட்டாணி- 1/4 கப்
நெய்- 3 தேக்கரண்டி
பட்டை- 1
ஏலக்காய்- 3
பிரியாணி இலை- 1
கிராம்பு- 3
கசகசா- சிறிதளவு
எண்ணெய்- 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 4
செய்முறை:
*முதலில் அடுப்பில் குக்கரை வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றவும்.
*இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கசகசா ஆகியவற்றை சேர்க்கவும்.
*இவை பொரிந்தவுடன் நீட்டு வாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிவந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும் பத்து நிமிடங்கள் ஊற வைத்து சுத்தம் செய்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.
*ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தேங்காய் பால் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
*தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி ஒரு விசில் விட்டு எடுத்தால் சுவையான தேங்காய் பால் புலாவ் தயார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.