இட்லி, தோசைக்கு சட்டென்று ஒரு சைட் டிஷ் ரெடி பண்ண வேண்டும் என்று நினைத்தால், ஒரு செம ஈசியான ரெசிபி ஒன்று உள்ளது. வெறும் ஐந்தே நிமிடத்தில் தயாராகும் அனைவருக்கும் விருப்பமான கார சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம்- 2
தக்காளி- 2
வர மிளகாய்- 5
பூண்டு- 2 பல்
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய்- 3 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
செய்முறை:
*ஒரு மிக்ஸி ஜாரில் உரித்து ஒன்றும் பாதியுமாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து கொள்ளவும்.
*இதனோடு பூண்டு, வர மிளகாய், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும்.
*கடுகு பொரிந்தவுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
*உளுத்தம்பருப்பு சிவந்து வந்தவுடன் கறிவேப்பிலை போட்டு தாளித்து ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
*பின்னர் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் மேலும் உப்பு சேர்த்து கிளறவும்.
*தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்தால் சுவையான கார சட்னி தயார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.