சாம்பாரில் பல வகை உண்டு. நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி கதம்ப சாம்பார். இந்த சாம்பார் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இப்போது கதம்ப சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் -1
கத்தரிக்காய் -3
மாங்காய் -1
பீன்ஸ் -4
கேரட் -1
அவரைக்காய் -3
உருளைக்கிழங்கு -1
வெங்காயம் -2
தக்காளி -2
பச்சை மிளகாய் -2
பூண்டு -3பல்
துவரம்பருப்பு -200(கிராம்)
மஞ்சள்தூள் -2சிட்டிகை
சாம்பார் தூள் -2டேபிள்ஸ்பூன்
கடுகு -1டீஸ்பூன்
உளுந்து -1டீஸ்பூன்
சீரகம் -1டீஸ்பூன்
வெந்தயம் -கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -கால் டீஸ்பூன்
புளிச்சாறு -2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
வேகவைக்க:
குக்கரில் துவரம்பருப்பு, வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், சிறிதளவு சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தாளிக்க :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம், உளுந்து, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், சாம்பார்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
செய்முறை:
*பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் வேகவைத்த பொருட்களுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.
*பின்பு சாம்பார்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*காய்கறிகள் நான்றாக வெந்தவுடன்.புளிக்கரைசலை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
*பின் தாளித்த பொருட்கள் அனைத்தும் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
This website uses cookies.