நாம் அனைவரும் ஒரே மாதிரியான பொருட்கள் பயன்படுத்தி சாம்பார் செய்தாலும் ஒவ்வொருவர் செய்யும் சாம்பாரும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் பயன்படுத்தும் சாம்பார் பொடி தான். சாம்பார் பொடி அரைக்க பயன்படுத்தும் பொருட்களை சரியான அளவுகளில் எடுப்பது மிகவும் அவசியம். எனவே சாம்பார் செய்ய முக்கிய பொருளாக இருக்கும் சாம்பார் பொடியை எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வர மல்லி – 1/2 கப்
வர மிளகாய்- 17
மிளகு- ஒரு தேக்கரண்டி
சீரகம்- 1 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 1/2 தேக்கரண்டி
கடுகு- 1 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- இரண்டு கொத்து
செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வர மல்லி விதைகள், வர மிளகாய், மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போன்ற பொருட்களை சேர்த்து தனித்தனியாக டிரை ரோஸ்ட் செய்யவும். எண்ணெய் பயன்படுத்தாமல் வறுக்க வேண்டும்.
*அடுப்பை அணைத்து விட்டு, கடாய் சூடாக இருக்கும் போதே மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூளை வறுத்து எடுத்து கொள்ளவும்.
*வறுத்து வைத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்தால் கம கம சாம்பார் பொடி தயார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.