பொதுவாக நாம் பாசிப்பருப்பு மற்றும் சேமியாவில் பாயாசம் செய்வது வழக்கம். ஆனால் பாஸ்மதி அரிசியில் ஒரு முறையாவது நீங்கள் பாயாசம் செய்து பார்க்க வேண்டும். ஒரு முறை செய்துவிட்டால் நிச்சயமாக இந்த ரெசிபியை அடிக்கடி செய்து சாப்பிட்டு மகிழ்வீர்கள். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். இந்த பாயசத்தில் நாம் பால் மற்றும் அனைத்து விதமான நட்ஸ் வகைகளை சேர்த்து செய்யப் போவதால் இது மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். பசியோடு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பிள்ளைகளுக்கு இந்த பாயாசத்தை நீங்கள் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர்
பாஸ்மதி அரிசி – 100 கிராம்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
இடித்த வெல்லம் – 1 கப்
முந்திரி பருப்பு
பாதாம் பருப்பு
பிஸ்தா பருப்பு
உலர்ந்த திராட்சை
ஏலக்காய் – 3
பிரியாணி இலை – 2
செய்முறை
*அரிசி பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 100 கிராம் அளவு பாஸ்மதி அரிசியை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
*அதில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு லிட்டர் பாலை ஊற்றி மிதமான தீயில் 30 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
இதையும் படிக்கலாமே: இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோமா..???
*பால் கொதித்துக் கொண்டிருக்கும் பொழுதே பால் பவுடரில் 2 டீஸ்பூன் அளவு பால் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
*30 நிமிடங்கள் கழித்து நாம் கலந்து வைத்துள்ள பாஸ்மதி அரிசி மற்றும் நெய் கலவையை பாலில் சேர்த்து கிளறவும்.
*தொடர்ந்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இந்த சமயத்தில் 2 பிரியாணி இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
*இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு ஏலக்காய் பொடியை சேர்த்து கலக்கவும்.
*பாஸ்மதி அரிசி நன்றாக வெந்து வரும் பொழுது நாம் ஏற்கனவே செய்து வைத்த பால் பவுடர் கலவையை சேர்க்கவும்.
*மேலும் இடித்த வெல்லத்தை சேர்த்து கிளறவும்.
*இப்போது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, உலர்ந்த திராட்சைகள் ஆகிய நட்ஸ் வகைகளை 2 டீஸ்பூன் நெய்யில் வதக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
*அவ்வளவுதான் கிரீமியான அரிசி பாயாசம் தயார்.
*இதனை நீங்கள் சூடாக சாப்பிடலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த நிலையிலும் சாப்பிடலாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.