உருளைக்கிழங்கு வைத்து செய்யப்படும் தின்பண்டங்கள் எல்லாமே நம் அனைவருக்கும் ஃபேவரெட் தான். அதில் உருளைக்கிழங்கு சிப்ஸிற்கு தனி இடமுண்டு. அப்படி நீங்கள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சிப்ஸை இனி கடைகளில் வாங்கி சாப்பிட தேவையில்லை. வெறும் ஐந்து நிமிடங்களில் எளிதாக வீட்டிலே தயார் செய்து விடலாம்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு பெரிய உருளைக்கிழங்காக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அதோடு இனிப்பு சுவை இல்லாத உருளைக்கிழங்கு தான் வாங்க வேண்டும். ஏனெனில், உருளைக்கிழங்கு இனிப்பு சுவையோடு இருந்தால் அது சிப்ஸின் சுவையையே கெடுத்து விடும்.
இப்போது உருளைக்கிழங்கை தோல் சீவி கொள்ளவும். தோல் சீவியதும் அதனை கழுவிக் கொள்ளவும். அடுத்து சீவலை எடுத்து அதில் உருளைக்கிழங்கை சீவவும். அதன் ஈரப்பதம் போகும் வரை தனித்தனியாக வைத்து உலர விடவும். பின்னர் அடுப்பில் எண்ணெயை வைத்து காய விடுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும் சீவி வைத்த உருளைக்கிழங்கை போடவும். எண்ணெயின் சலசலப்பு அடங்கி, உருளைக்கிழங்கு மிதக்கும் போது அதனை வெளியே எடுத்து விடலாம். இப்போது ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் தனி மிளகாய் தூள் சேர்த்து அதில் உருளைக்கிழங்கு சிப்ஸை போட்டு குலுக்கவும். இப்போது மொறு மொறுப்பான காரசார உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார். இதனை காற்று புகாத டப்பா ஒன்றில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.