பழங்காலத்தில் இருந்தே ஜவ்வரிசி என்பது பயன்பாட்டில் இருந்து வருகிறது. விரத நாட்களில் சோர்வை நீக்க ஜவ்வரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாம் ஜவ்வரிசி வைத்து வாயில் எச்சில் ஊற செய்யும் கேசரி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி- 1 கப்
சர்க்கரை- 1 கப்
நெய்- 5 தேக்கரண்டி
ஏலக்காய் தூள்- 1/4 தேக்கரண்டி
குங்கும பூ- ஒரு சிட்டிகை
முந்திரி பருப்பு- 12
உப்பு- ஒரு சிட்டிகை
செய்முறை:
*முதலில் ஜவ்வரிசியை சுத்தம் செய்து விட்டு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள்.
*ஒரு கப் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
*குங்கும பூவை ஒரு ஸ்பூன் தண்ணீரில் ஊற வைக்கவும்.
*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு, முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
*அதே நெய்யில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து ட்ரை ஆகும் வரை வறுத்து பின்னர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
*ஜவ்வரிசி வெந்ததும் அரைத்து வைத்த சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
*அவ்வப்போது நெய் சேர்த்து கிளறுங்கள்.
*கடைசியில் குங்கும பூ, ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கிளறினால் ஜவ்வரிசி கேசரி தயார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.