9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது. அதன்படி பொங்கல் ரேஸில் அதிக கலெக்ஷனை அள்ளியது யார் என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்களுக்குமே இருந்து வருகிறது.
துணிவு, வாரிசு படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. வாரிசு சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் துணிவு படத்தை விட சில கோடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தது.
இந்நிலையில், 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், துணிவு ரூ. 65 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ள நிலையில், வாரிசு படமும் ரூ. 63 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தன்னுடைய முதல் இடத்தை அப்படியே தக்கவைத்துள்ளது துணிவு.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மீது நடிகர் விஜய் சற்று கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்க்கு காரணமே வாரிசு படம் தெலுங்கில் தள்ளிப்போனது தான் என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவித்துவிட்டு, திடீரென சில காரணங்களால் தெலுங்கில் வாரிசு திரைப்படம் இரு நாட்களுக்கு பின் தேதி வெளியாகும் என தில் ராஜு அறிவித்தார்.
இதனால் விஜய் சற்று அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தில் ராஜு மீது விஜய்க்கு கோபம் வந்ததாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அறிவித்தபடி 11ம் தேதியே தெலுங்கிலும் வாரிசு படத்தை வெளியிட்டிருந்தால், இன்னும் வசூலை அள்ளியிருக்கும் என்று விஜய் நினைக்கிறார் போலிருக்கு.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.