ஆரோக்கியம்

இத அளவா குடிச்சா ஹார்ட் அட்டாக் வராம தப்பிச்சுக்கலாம்!!!

தேங்காய் மட்டுமல்ல தேங்காயை அரைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் பாலிலும் எக்கச்சக்கமான நன்மைகள் பொதிந்து கிடைக்கிறது. தேங்காய் பால் குடிப்பதற்கு டேஸ்ட்டாக இருப்பது மட்டுமல்லாமல், அதில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. ஒரு கப் துருவிய தேங்காயில் 2 கப் தண்ணீர் ஊற்றி அரைத்து அதனை வடிகட்டி சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து பருகினால் சுவை  அட்டகாசமாக இருக்கும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு அலர்ஜி கொண்டுள்ள நபர்களுக்கு தேங்காய் பால் ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது. 

தேங்காய் பால் குடிப்பது இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவு தரும் மற்றும் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் செய்யப்பட்ட தேங்காய் பாலை மிதமான அளவு சாப்பிட்டு வர உங்களுடைய இதய ஆரோக்கியம் மேம்படும். 

தேங்காய் பாலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதால் இது உங்களுடைய இதயத்திற்கு நன்மை அளிக்கிறது. 

எனினும் இதில் சாச்சுரேட்டட் ஃபேட்டும் அதிகமாக இருக்கும் என்பதால் இதயத்திற்கு நன்மை தரும் பழங்கள் மற்றும்  காய்கறிகளையும் இதனுடன் சேர்த்து சாப்பிடுவது அவசியம். தேங்காய்ப்பால் சாப்பிடுவது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைப்பும் என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆய்வுகள் இல்லாவிட்டாலும் இதனை உங்களுடைய அன்றாட டயட்டில் சேர்ப்பது நிச்சயமாக உங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஏனெனில் தேங்காய் பாலில் MCT என்று அழைக்கப்படும் மீடியம் செயின் டிரைகிளிசரைடுகள் இருக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தரக்கூடியது. 

நமது உடலில் இருக்கக்கூடிய HDL கொலஸ்ட்ராலை அதிகரிப்பதன் மூலமாக இதயத்திற்கு நன்மை அளிக்கிறது. மேலும் தேங்காய் பாலில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. ஆனால் தேங்காய் பாலின் முழு நன்மைகளும் உங்களுக்கு கிடைப்பதற்கு அது ஃபிரஷாக இருப்பதையும் அதில் எந்த ஒரு கெமிக்கல் அல்லது பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்படாமல் இருப்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் அது உங்களுடைய இதயத்திற்கு மோசமானதாக மாறிவிடலாம். ஆகவே கடைகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே தேங்காய் பால் தயாரித்து சாப்பிடுவது சிறந்தது. 

இதையும் படிக்கலாமே: பேஷியல் யோகா: தினமும் 10 நிமிஷம் செலவு செய்தாலே போதும்… எப்போதும் இளமையா இருக்கலாம்!!!

தேங்காய்ப்பால் குடிப்பதால் உடல் நலனுக்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமா? 

இதய பிரச்சினைகள் உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ரால் அல்லது டயாபடீஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தேங்காய்ப்பாலை மிதமான அளவு பருக வேண்டும். ஏனெனில் தேங்காய் பாலில் அதிக அளவு சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதால் இது இதய நோய் மற்றும் பிற சமந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். 

இந்தப் பிரச்சினைகளை குறைப்பதற்கு தேங்காய் பாலில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகளை நீங்கள் சமநிலைப்படுத்த வேண்டும். அதற்கு நட்ஸ் மற்றும் அவகாடோ, அதிக அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.