ஆரோக்கியம்

யூஸ் பண்ண டீ பேக்குகளை யூஸ்ஃபுல்லா மாற்ற சில டிப்ஸ்

இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கக்கூடிய தேநீர் தினமும் மில்லியன் கணக்கான நபர்கள் பருகக் கூடிய ஒரு பானமாக அமைகிறது. மசாலா டீ, பிளாக் டீ அல்லது கிரீன் டீ என்று இது பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. பலருடைய நாள் இந்த பானத்தோடு தான் ஆரம்பிக்கிறது. ஆனால் ஆச்சரியமூட்டும் விதமாக தேநீரை இன்னும் பல்வேறு விதமான விஷயங்களுக்கு நாம் பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக அழகு வழக்கத்தில் தேநீர் ஒரு சிறந்த பொருளாக அமைகிறது. சருமத்தில் உள்ள எரிச்சல்களை ஆற்றுவது முதல் ஆரோக்கியமான தலைமுடியை ஊக்குவிப்பது வரை தேநீர் எக்கச்சக்கமான பலன்களை அளிக்கிறது.

ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் நிறைந்த தேநீர் ஒருவருடைய அழகு பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்க வேண்டிய ஒரு சிறந்த பொருள் உங்களுடைய சருமத்தையும் தலைமுடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு தேநீரை பயன்படுத்துவதற்கான ஒரு சில வழிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீக்கத்தை குறைக்கிறது

கண்களைச் சுற்றி ஏற்பட்டுள்ள வீக்கத்தை குறைப்பதற்கு நீங்கள் ஊறவைத்த டீ பேக்குகளை பயன்படுத்தலாம். இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் டானின்கள் ரத்த நாளங்களை சுருங்க செய்து, வீக்கத்தை குறைக்கிறது. இதற்கு நீங்கள் குளிரூட்டப்பட்ட டீ பேக்குகளை பயன்படுத்த வேண்டும். கண்களை மூடி அவற்றின் மீது டீ பேக்குகளை வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வெடுத்து வர அதன் பலன்களை பெறலாம்.

ஃபேஸ் மாஸ்குகள் 

கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகளுக்காக அது ஒரு சிறந்த ஃபேஸ் மாஸ்க் பேஸ் ஆக அமைகிறது. போஷாக்கு நிறைந்த பேஸ் மாஸ்கை தயார் செய்வதற்கு கிரீன் டீயுடன் தேன் மற்றும் தயிர் கலந்து பயன்படுத்தலாம். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை ஆற்றி, அதனை பளபளக்கச் செய்து தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது.

தலை முடியை அலசுவதற்கு 

டீயில் உள்ள பண்புகள் சரும பராமரிப்பு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆற வைத்த கிரீன் டீ அல்லது பிளாக் டீயை ஷாம்பு பயன்படுத்திய பிறகு உங்களுடைய தலைமுடியை அலசுவதற்கு நீங்கள் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் டானின்கள் பொடுகு பிரச்சனையைப் போக்கி, மயிர்க்கால்களை வலுப்பெறச் செய்து பளபளப்பான மற்றும் மென்மையான கூந்தலை தருவதற்கு உதவுகிறது.

சன்பர்ன் 

ஈரமான டீ பேக்குகளை சன்பர்ன் கொண்ட தோலில் பயன்படுத்துவதன் மூலமாக உடனடி நிவாரணம் பெறலாம். டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் டானின்கள் வீக்கத்தை குறைத்து, வலியை போக்கி, குணப்படுத்தும் செயல்முறையை விரைவுப்படுத்துகிறது. டீயில் உள்ள ஆற்றும் பண்புகள் சன்பர்ன் உள்ள பகுதியை அமைதிப்படுத்தி அதில் உள்ள எரிச்சலையும், அசௌகரியத்தையும் போக்குகிறது.

இதையும் படிக்கலாமே:  கொடுத்தா சாப்பிட்டுகிட்டே இருக்கலாம் போல…உடைத்த சம்பா கோதுமை கேசரி…!!!

முகத்திற்கான டோனர்

பயன்படுத்தப்பட்ட டீ பேக்குகளை உங்களுடைய முகத்திற்கு டோனராக நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு டீ பேக்கை கொதிக்கும் தண்ணீரில் வைத்து அது ஆறியவுடன் அதனை உங்கள் முகத்திற்கு பயன்படுத்துங்கள். டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் டானின்கள் சருமத்தின் pH அளவை சமநிலையாக்கி, சரும துளைகளை இறுக்கி, வீக்கத்தை குறைக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

16 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

17 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

17 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

17 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

19 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

19 hours ago

This website uses cookies.