ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் என்பதே பெரும் தொல்லையாக இருக்கும் போது, அதனுடன் சேர்ந்து வரும் வலியானது கொடுமையிலும் கொடுமை. இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மாதவிடாயின் போது அதிக வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிக்காத சிலர் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும்.
எனினும், மாதவிடாய் வலி உள்ளவர்கள் வலியில் இருந்து விடுபட ஒரு சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம். இவற்றில் வெந்நீர் பை உபயோகிப்பது, டார்க் சாக்லேட் சாப்பிடுவது, லேசான உடற்பயிற்சிகள் செய்வது போன்றவை அடங்கும். இப்போது மாதவிடாய் வலிக்கான சிறந்த வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. இரண்டு சிறிய இஞ்சி துண்டுகள் எடுத்து, அதனை உரித்து நசுக்கவும். இரண்டு கிளாஸ் தண்ணீர் கொண்ட ஒரு பாத்திரத்தில் நறுக்கிய இஞ்சியைச் சேர்க்கவும். இஞ்சி கொண்ட தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இஞ்சியை வடிகட்டி, பிறகு தேநீர் வடிவில் தண்ணீரைக் குடிக்கவும். மாதவிடாய் வலி ஏற்படும் போது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கவும்.
2. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸ் தண்ணீரில் இதனை சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதனை நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் சாப்பிடலாம் அல்லது ஒவ்வொரு உணவிற்கும் பிறகு சாப்பிடுங்கள்.
3. மாதவிடாய் வலிக்கு இஞ்சியை உரித்து அரைக்கவும். அதன் சாற்றை வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து உட்கொள்ளவும்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.