வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை ஸ்க்ரப்பாக பயன்படுத்தி பார்ப்போம் வாங்க!!!

உங்கள் முகம் பொலிவில்லாமல் இருக்கின்றதா வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஸ்கிரப் செய்து உங்கள் முகத்தை
பொலிவடைய செய்யுங்கள்.

*வெயிலின் தாக்கத்தினால் வியர்வை அதிகமாக வெளியேறும். இதனால் தூசுகள் மற்றும் இறந்த செல்கள் படிவதால். சருமத் துளைகள் அடைத்துக் கொள்ளும். இதனால் முகமானது பொலிவிழந்து வறண்டு, கருத்துப் போகும். இந்த பிரச்சனைகளையெல்லாம் தீர்ப்பதற்கு ஸ்கிரப்பிங் முறையே உதவும்.

*உப்பு ஸ்கிரப்பிங்:
உப்பு ஸ்கிரப்பிங் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மீட்பதுடன், இறந்த செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. உப்பு ஸ்கிரப்பிங் செய்வதன் மூலம் சருமம் வழுவழுப்பாக மாறும். இந்த உப்பு ஸ்கிரப்பிங் முகத்திற்கு மட்டுமின்றி உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயன்படுத்தலாம். உடம்பு வலியால் தவிப்பவர்கள் குளிக்கும் போது தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளித்தால், உடலவலி நீங்கி, உடல் புத்துணர்ச்சி பெறும்.

உப்பை சிறிதளவு எடுத்து முகத்தில் மேலும், கீழுமாக ஸ்கிரப் செய்யது முகத்தை கழுவ வேண்டும். உப்புடன், காபித்தூள் கலந்தும் ஸ்கிரப் செய்யலாம். இப்படி செய்வதால் செல்களுக்கு புத்துயிர் கிடைக்கும். சரும சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் பெற முடியும்.
தக்காளியுடன் உப்பு கலந்து முகத்தில் ஸ்கிரப் செய்யும் போது முகம் பளிச்சென்று காணப்படும்.

ரவை மற்றும் தயிர் ஸ்கிரப்பிங்:
ரவை ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் ஒரு டேபிள்ஸ்பூன், கஸ்தூரிமஞ்சள் ஒரு சிட்டிகை மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் பத்து நிமிடம் ஸ்கிரப் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள தூசுகள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

ரவை மற்றும் கற்றாழை ஸ்கிரப்பிங்:
ரவை ஒரு டேபிள்ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு டேபிள்ஸ்பூன் இரண்டையும் நன்றாக கலந்து பத்து நிமிடம்
முகத்தில் தேய்த்து நன்றாக ஸ்கிரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ரவை மற்றும் தக்காளி ஸ்கிரப்பிங்:
ரவை ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி சாறு இரண்டு டேபிள்ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு டேபிள்ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடம் நன்றாக ஸ்கிரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகம் பளபளப்பாகவும், பொலிவுடன் காணப்படும்.

சர்க்கரை ஸ்கிரப்பிங்:
சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பத்து நிமிடம் ஸ்கிரப் செய்ய வேண்டும். பிறகு முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.

சர்க்கரை மற்றும் தக்காளி ஸ்கிரப்பிங்:
சர்க்கரை மற்றும் தக்காளி சாறு இரண்டையும் நன்றாக முகத்தில் தேய்த்து ஸ்கிரப் செய்ய வேண்டும். சர்க்கரை வைத்து ஸ்கிரப்பிங் செய்வதால் சருமம் வறண்டு போவதை தடுக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். ‌சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தரும். முகத்தில் ஏற்படக்கூடிய கருமை மற்றும் சுருக்கங்களை போக்கி, இளமையான தோற்றத்தை கொடுக்கும் தன்மை கொண்டது.

ஓட்ஸ் ஸ்கிரப்பிங்:
ஓட்ஸ் இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து ஒன்றிரண்டாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த ஓட்ஸ் மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து பின்பு முகத்தில் பத்து நிமிடம் ஸ்கிரப் செய்து, 15 நிமிடம் காயவைத்து பிறகு முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.

ஓட்ஸ் மற்றும் தக்காளி ஸ்கிரப்பிங்:
ஓட்ஸ் இரண்டு டேபிள்ஸ்பூன், தக்காளி சாறு ஒரு டேபிள்ஸ்பூன், கடலைமாவு ஒரு டேபிள்ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, கற்றாழை ஜெல் ஒரு டேபிள்ஸ்பூன் அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் ஸ்கிரப் செய்யலாம். இந்த கலவையை ஃபேஸ் பேக்காவும் (face pack) முகத்தில் அப்ளை செய்யலாம்.

இப்படி வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே நம் முகத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

11 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

12 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

13 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

13 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

14 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

14 hours ago

This website uses cookies.