முழுமையான ஊட்டச்சத்தை பெற பழங்களை இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டும்!!!

பழங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த காரணத்திற்காக, ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பழத்தை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லது என்றாலும், ஊட்டச்சத்து மதிப்பை பராமரிக்க குறிப்பிட்ட நேரத்தில் தான் பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது. அப்போதுதான் அதிலிருந்து நமக்கு வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் முழுமையாக கிடைக்கும்.

பழங்களை எப்போது சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்?
காலை நேரத்தில்:
பழங்களை சாப்பிடுவதற்கு காலை நேரம் ஏற்றது. ஆனால் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே காலையில் எழுந்து முகம் கழுவி, தண்ணீர் குடித்து, சிறிது நேரம் கழித்து பழத்தை சாப்பிடலாம். தூங்கி எழுந்தவுடன் பழங்களை உண்பதால் விரைவில் ஜீரணமாகும். இதன் விளைவாக முக்கிய வைட்டமின்கள் மற்றும் என்சைம்கள் சரியாக செயல்படும்.

இரண்டு உணவு இடைவேளைகளில்: காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் ஒரு சிலருக்கு பசி எடுக்கும். இந்த நேரத்தில் பழங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும். ஏனெனில் காலை உணவை சாப்பிட்ட பிறகு வயிறு கனமாக இருந்தால், பழங்கள் அந்த உணவை மிக எளிதாக ஜீரணிக்கும்.

உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும்: உடற்பயிற்சி செய்யத் தேவையான ஆற்றலைப் பெற அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்ணுங்கள். இந்த நேரத்திலும் பழங்களை உண்ணலாம்.

பழங்களை எப்போது சாப்பிடக்கூடாது:-
இரவில் தூங்கும் முன் : தூங்கும் முன் பழங்களை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல், அது தூக்கத்தையும் சீர்குலைக்கும்.

உணவுடன்: பழங்களை முக்கிய உணவோடு சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் குறைகிறது. பழங்களின் சத்துக்களை உடலுக்குச் சரியாகச் செலுத்த உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பழங்களைச் சாப்பிடுங்கள்.

டீ அல்லது காபி சாப்பிடும்போது : டீ சாப்பிடும் போது பழங்களை சாப்பிடுவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கம் உடலின் செரிமான அமைப்பில் பிரச்சனைகளை உருவாக்குகிறது.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

2 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

4 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

4 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

5 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

5 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

6 hours ago

This website uses cookies.