பழங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த காரணத்திற்காக, ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பழத்தை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லது என்றாலும், ஊட்டச்சத்து மதிப்பை பராமரிக்க குறிப்பிட்ட நேரத்தில் தான் பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது. அப்போதுதான் அதிலிருந்து நமக்கு வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் முழுமையாக கிடைக்கும்.
பழங்களை எப்போது சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்?
காலை நேரத்தில்:
பழங்களை சாப்பிடுவதற்கு காலை நேரம் ஏற்றது. ஆனால் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே காலையில் எழுந்து முகம் கழுவி, தண்ணீர் குடித்து, சிறிது நேரம் கழித்து பழத்தை சாப்பிடலாம். தூங்கி எழுந்தவுடன் பழங்களை உண்பதால் விரைவில் ஜீரணமாகும். இதன் விளைவாக முக்கிய வைட்டமின்கள் மற்றும் என்சைம்கள் சரியாக செயல்படும்.
இரண்டு உணவு இடைவேளைகளில்: காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் ஒரு சிலருக்கு பசி எடுக்கும். இந்த நேரத்தில் பழங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும். ஏனெனில் காலை உணவை சாப்பிட்ட பிறகு வயிறு கனமாக இருந்தால், பழங்கள் அந்த உணவை மிக எளிதாக ஜீரணிக்கும்.
உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும்: உடற்பயிற்சி செய்யத் தேவையான ஆற்றலைப் பெற அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்ணுங்கள். இந்த நேரத்திலும் பழங்களை உண்ணலாம்.
பழங்களை எப்போது சாப்பிடக்கூடாது:-
இரவில் தூங்கும் முன் : தூங்கும் முன் பழங்களை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல், அது தூக்கத்தையும் சீர்குலைக்கும்.
உணவுடன்: பழங்களை முக்கிய உணவோடு சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் குறைகிறது. பழங்களின் சத்துக்களை உடலுக்குச் சரியாகச் செலுத்த உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பழங்களைச் சாப்பிடுங்கள்.
டீ அல்லது காபி சாப்பிடும்போது : டீ சாப்பிடும் போது பழங்களை சாப்பிடுவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கம் உடலின் செரிமான அமைப்பில் பிரச்சனைகளை உருவாக்குகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.