ஒரு சிலருக்கு உணவு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும். இது இரிட்டபுள் பவள் சின்ட்ரோம் (Irritable Bowel Syndrome) என்று அழைக்கப்படுகிறது. உலகத்தில் உள்ள 10% மக்களுக்கு இந்த நோய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான முதல் மிதமான வயிற்றுப்போக்கு வரை ஏற்படலாம். அதிலும் குறிப்பாக ஒரு சில உணவுகளை சாப்பிட்ட உடனேயே வயிற்றுப்போக்கு ஏற்படும்.
இந்த நோயை குணமாக்கும் மருந்து எதுவும் கிடையாது. ஆனால் ஒரு சில உணவுகளை சாப்பிடுவதன் மூலமாகவும், ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலமாகவும் இந்த நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தலாம்.
அந்த வகையில் இந்த பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் நார்ச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் சாப்பிட கூடாது. அதேபோல காரம் நிறைந்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மேலும் தயிர், வெண்ணெய், பால் போன்ற பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது வயிற்றுப் போக்கு ஏற்படுவதை அதிகரிக்கும் என்பதை ஒருவர் மனதில் கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக பேரிக்காய், மாம்பழம், ஆப்பிள், தர்பூசணி போன்ற பழங்களையும் ஒருவர் தவிர்ப்பது நல்லது. திராட்சைப்பழம், பீன்ஸ், கேரட், ஆரஞ்சு, ப்ளூபெர்ரி போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்ல பலன் தரும். இறைச்சி வகைகள், முட்டை போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம். அதே சமயம் எல்லா வகையான கீரைகளையும் சாப்பிடலாம். ஆகவே, உண்ணும் உணவை கவனமாக தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலமாக வயிற்றுப்போக்கு ஏற்படுவதை ஒருவர் கட்டுப்படுத்த முடியும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
This website uses cookies.