மருதாணி: அழகும் மருத்துவ குணங்களும் ஒரே இடத்தில்!!!

மருதாணி இலை என்றாலே பலரும் நினைப்பது, மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால், மருதாணி இலைகளில் பல மருத்துவ குணங்களும் உள்ளன.

மருதாணி இலைகளில் உள்ள மருத்துவ குணங்கள்:
*பெண்கள்:
பெண்களுக்கு மருதாணி என்றாலே மிகவும் பிடிக்கும். மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவார்கள். பெண்கள் மருதாணியை கைகளுக்கு வைப்பதால் மன அழுத்தம் குறையும், நகச்சுத்து வராமல் தடுக்கும், கைகள் மென்மையாக இருக்கும். இப்படி பெண்கள் விரும்பி வைக்கும் மருதாணியில் பல நன்மைகள் உள்ளன.

*தலைவலி:
தலைவலி என்றாலே யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. தலைவலி வந்தால் வேலையில் எந்தவித கவனமும் இல்லாமல் போய்விடும். தலைவலி ஏற்படும் போது மருதாணி இலைகளை அரைத்து நெற்றியில் தடவி வந்தால் தலைவலி பிரச்சனை தீரும்.

*தலைமுடிக்கு:
மருதாணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து காயவைத்து, சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டி தனியாக ஒரு பாட்டிலில் ‌ஊற்றி வைத்துக்கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால், நாளடைவில் இளநரை மறையும், உடல் சூடு குறையும், கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.

*உடலில் ஏற்பட்ட வீக்கம் குறையும்:
உடலில் ஏதாவது ஒரு இடத்தில் சுளுக்கு ஏற்பட்டு அதனால் வீக்கம் ஏற்பட்டிருந்தால் அல்லது உடலுள்ள மூட்டு பகுதியில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் , மருதாணி இலைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெயை வீக்கம் உள்ள இடத்தில் தடவி வந்தால் வீக்கம் விரைவில் வற்றும்.

*தூக்கமின்மை:
தூக்கமின்மை என்பது இந்த காலக்கட்டத்தில் பலருக்கு மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால், அவர்களின் உடல், மன ஆற்றலை குறைக்கிறது . இந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என்றால் மருதாணி இலைகளில் இருந்து கிடைக்கும் மருதாணி எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து நரம்புகள் குளிர்ச்சியாகி தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

பயன்கள்:
*மருதாணி இலை கண்ணுக்கு புலப்படாத கிருமிகளை அழிக்க கூடியது. மருதாணி இலைகள் சிறந்த கிருமி நாசினி என்றே கூறலாம்.

*மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்துக் கொள்ளவதால், நகசுத்தி வராமல் தடுக்கும்.

* உடலில் எங்காவது புண்கள் , வீக்கம் இருந்தால் மருதாணி இலைகளை பயன்படுத்தினால் விரைவில் ஆறிவிடும்.

*மருதாணி இலைகளை பயன்படுத்துவதால் உடல்சூடு, மன அழுத்தம் , தூக்கமின்மை, உடல் உஷ்ணம் போன்ற பல பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது.

இவ்வளவு மருத்துவ குணங்களும் , பயன்களும், நன்மைகளும் நிறைந்த அற்புத மூலிகையான மருதாணி அழகோடு ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இதை சரியாக பயன்படுத்தி பல்வேறு வகையான நோய்களிலிருந்து விடுபட்டு உடல்நலத்தை சிறப்பாக ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

21 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

22 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

23 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

23 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.