பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வீடு வீடாகச் சென்று உதவி கேட்டும், பொதுமக்கள் யாரும் உதவ முன்வராத சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உஜ்ஜைன் நகரத்தில் உள்ள பத்நகர் சாலையில் ஆசிரமம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஆசிரமத்தின் வெளியே 12 வயது சிறுமி ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் ரத்தத்துடன், வீடு வீடாக சென்று உதவி கேட்டுள்ளார். ஆனால், யாரும் உதவ முன்வராத நிலையில், அந்த சிறுமி திகைத்து போய் காணப்பட்டார்.
இந்த சூழல், ஆசிரமத்தின் சாமியார் ராகுல் சர்மா என்பவர் கவனித்து உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின்பு, போலீசார் விரைந்து வந்து, சிறுமியை அழைத்து சென்றனர். இதுபற்றி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து ஆசிரம சாமியார் கூறியதாவது :- ஆசிரமத்தில் இருந்து வேலையாக புறப்பட்டு செல்லும் போது, சிறுமி ரத்தத்துடன், அரை நிர்வாண கோலத்தில் ஆசிரம வாயிலில் கிடந்தார். அவருக்கு தனது ஆடைகளை கொடுத்து உதவினேன். பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். மஹாகால் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டேன். அவர்களிடம் நிலைமை பற்றி விளக்கி கூறினேன். அவர்கள் 20 நிமிடங்களில் ஆசிரமத்திற்கு வந்து சிறுமியை மீட்டுச் சென்றனர், என கூறியுள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் ஆய்வு செய்த போது, அந்த சிறுமி காயமடைந்தபடி, அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக சென்று உதவி கேட்கும் காட்சி இருந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், நெட்டிசன்கள் கொந்தளித்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.