12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… அரை நிர்வாணமாக ரத்தத்துடன் வீடு வீடாக உதவி கேட்ட சம்பவம் ; வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
28 September 2023, 3:54 pm
Quick Share

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வீடு வீடாகச் சென்று உதவி கேட்டும், பொதுமக்கள் யாரும் உதவ முன்வராத சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உஜ்ஜைன் நகரத்தில் உள்ள பத்நகர் சாலையில் ஆசிரமம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஆசிரமத்தின் வெளியே 12 வயது சிறுமி ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் ரத்தத்துடன், வீடு வீடாக சென்று உதவி கேட்டுள்ளார். ஆனால், யாரும் உதவ முன்வராத நிலையில், அந்த சிறுமி திகைத்து போய் காணப்பட்டார்.

இந்த சூழல், ஆசிரமத்தின் சாமியார் ராகுல் சர்மா என்பவர் கவனித்து உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின்பு, போலீசார் விரைந்து வந்து, சிறுமியை அழைத்து சென்றனர். இதுபற்றி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து ஆசிரம சாமியார் கூறியதாவது :- ஆசிரமத்தில் இருந்து வேலையாக புறப்பட்டு செல்லும் போது, சிறுமி ரத்தத்துடன், அரை நிர்வாண கோலத்தில் ஆசிரம வாயிலில் கிடந்தார். அவருக்கு தனது ஆடைகளை கொடுத்து உதவினேன். பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். மஹாகால் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டேன். அவர்களிடம் நிலைமை பற்றி விளக்கி கூறினேன். அவர்கள் 20 நிமிடங்களில் ஆசிரமத்திற்கு வந்து சிறுமியை மீட்டுச் சென்றனர், என கூறியுள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் ஆய்வு செய்த போது, அந்த சிறுமி காயமடைந்தபடி, அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக சென்று உதவி கேட்கும் காட்சி இருந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், நெட்டிசன்கள் கொந்தளித்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Views: - 459

0

0