மும்பை: தானே – திவா இடையே அமைக்கப்பட்டுள்ள 2 புதிய ரயில் பாதைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
மத்திய ரயில்வே வழித்தடத்தில் கல்யாண் முக்கியமான சந்திப்பு ரயில் நிலையமாக உள்ளது. இதில் கல்யாண் – சி.எஸ்.எம்.டி. இடையே 4 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதையில் ஸ்லோ மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மற்ற 2 பாதையில் விரைவு மின்சார ரயில்களுடன், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில், நீண்ட தூர ரயில்களால் மின்சார ரயில்களை தாமதமாக இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இதை தடுக்கும் வகையில் தானே – திவா இடையே ரூ.620 கோடி செலவில் கூடுதலாக 2 வழிப்பாதைகள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.
இந்த திட்டத்தில் 1.4 கி.மீ. நீள ரயில்வே மேம்பாலம், 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில் பாதைகளை இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். மாலை 4.30 மணிக்கு தொடங்கும் விழாவில் மோடி 2 மின்சார ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.