விசாகப்பட்டினம் அருகே ஒரே இடத்தில் 200 டன் கஞ்சா தீ வைத்து எரித்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான அளவில் கஞ்சா தோட்டங்கள் உள்ளன. அங்கிருந்து நாடு முழுவதும் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
எனவே கஞ்சா பயிர் செய்வது, கடத்துவது ஆகியவற்றை தடுத்து நிறுத்த கோரி பல்வேறு மாநிலங்களும் ஆந்திர அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இதனால் ஆந்திர மாநில அரசு விசாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாலைகளில் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி வாகன தணிக்கை மேற்கொண்டு கஞ்சா கடத்தலை தடுத்து நிறுத்தி வருகிறது.
இந்த நிலையில் விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 385 கிலோ கஞ்சா மற்றும் 133 கிலோ ஹாசிஸ் ஆயில் ஆகியவற்றை போலீசார் இன்று உயர் அதிகாரிகள் முன்னிலையில் தீ வைத்து அளித்தனர்.
தீ வைத்து எரிக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 250 கோடி ரூபாயாகும். விசாகப்பட்டினம் பகுதியில் சுமார் 7500 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கஞ்சா தோட்டங்களை போலீசார் இதுவரை அளித்துள்ளனர்.
இன்னும் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா தோட்டங்கள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.