ஆந்திரா : கடப்பா அருகே செம்மரம் கடத்திய 3 பேரை கைது செய்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள், வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இருந்து செம்மரங்கள் கடத்திய மூன்றுபேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கதிர்ஐயா, பிரதாப், கதிரப்பா ஆகிய மூன்று செம்மர கடத்தல்காரர்கள் ஒண்டி மிட்டா, சித்த வட்டா, பாக்கறா பேட்டை பகுதியிலிருந்து செம்மரங்களை கடத்திய போது போலீசார் பிடித்து கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலை வைத்து கடப்பா மாவட்டம் மண்டபள்ளி பகுதி விவசாய நிலத்தில் வெட்டி கடத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள 22 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய எஸ்யூவி ரக கார் இருசக்கர வாகனம் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கடத்தலில் தொடர்புள்ள மேலும் சிலரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.