பாஜக வேட்பாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம்.. ₹4.8 கோடி பறிமுதல் ; மறுபடியும் முதல்ல இருந்தா?
கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாபுரா தொகுதி பா.ஜ.க வேட்பாளரும் எம்.பி.,யுமான கே.சுதாகருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இன்று (ஏப்.,26) லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பணம் பதுக்கி வைத்திருக்கும் தகவல் தெரிந்தால், அங்கு அதிரடி சோதனையும் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: பெண் விஏஓவை தாக்கிய திமுக கவுன்சிலர்.. நள்ளிரவில் நடந்த ஷாக் : போலீசார் அதிரடி ACTION!
அந்த வகையில், அங்குள்ள சிக்கபள்ளாபுரா தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று (ஏப்.,25) அத்தொகுதி பா.ஜ.க வேட்பாளரான கே.சுதாகருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தினர்.
அதில், பதுக்கி வைத்திருந்த ரூ.4.8 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதநாயக்கனஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் கே.சுதாகருக்கு எதிராக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.