கொல்கத்தா : மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ்சாயத்தின் துணைத் தலைவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாதுஷேக் என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த 23ம் தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, அன்று மாலையே பர்ஷல் கிராமத்துக்கு அருகே உள்ள போக்டுய் என்னும் கிராமத்திற்கு சில மர்ம கும்பல் வந்தது. அவர்கள், அந்த கிராமத்தில் இருந்த வீடுகளுக்கு தீ வைத்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீயில் கருகி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது. அதில், உயிரிழந்த 8 பேரும், முன்னதாக கடுமையாக தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது.
இந்நிலையில், 8 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.