டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கில் கைதான ஷீசன்கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை துனிஷா சர்மா (வயது21) ‘அலி பாபா: தாஸ்தன்-இ-காபூல்’ டி.வி. தொடருக்காக கடந்த 24-ந் தேதி வசாயில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். திடீரென அவர் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முன்னாள் காதலனும், சக நடிகருமான ஷீசன் கானை (27) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை காலம் முடிந்து இன்று போலீசார் அவரை வசாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். முன்னாள் காதலன் ஷீசன் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் டி.வி. நடிகை துனிஷா சர்மாவை மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக அவரது தாய் வனிதா சர்மா குற்றம்சாட்டி இருந்தார். துனிஷா சர்மா மரணத்தை கொலை வழக்கமாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.