அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிக்குகையை நோக்கிய புனித யாத்திரை தற்போது தொடங்கி நடந்து வருகிறது. காஷ்மீரில் உள்ள இருமுகாம்களில் இருந்து ஜுன் 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை இந்த யாத்திரை நடக்கிறது. இதில், பங்கேற்க சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் மட்டுமல்லாது, பல்வேறு நாட்டவர்கள் கூட இந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அமர்நாத்தில் நேற்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத. இதனால், யாத்திரை மேற்கொண்டவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய விமானப்படையின் எம்.ஐ.17 ஹெலிகாப்டர்களும் இன்று மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. மேலும், 30 முதல் 40 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதேவேளையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.