தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியை தடுத்து நிறுத்தி, மனைவி கண்முன்னே கணவனை மர்ம நபர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்தை சேர்ந்தவர்கள் நாகராஜ் மற்றும் சையத் ஆஸ்ரின் சுல்தானா. இருவரும் கல்லூரியில் படித்த நாட்களிலிருந்து காதலித்து வந்ததை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி ஆரிய சமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நாகராஜ் தனது மனைவி சையத் ஆஸ்ரின் சுல்தானா உடன் நேற்று இரவு கருமான் காட் பகுதியிலிருந்து சரூர் நகர் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது, சரூர்நகர் நகராட்சி அலுவலகம் எதிரில் இவர்களுடைய வாகனத்தை நிறுத்திய மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் நாகராஜ் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சையத் ஆஸ்ரின் சுல்தானா, உதவிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை அழைத்த போதும், உதவ யாரும் முன் வராத நிலையில், நாகராஜ் மேலே படுத்து அடி விழாதவாறு காப்பாற்ற முயன்றார். இருப்பினும், அதற்குள் பலத்த காயமடைந்த நாகராஜ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சரூர் நகர போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் நாகராஜ் மற்றும் சையத் ஆஸ்ரின் சுல்தானா திருமணத்திற்கு சுல்தானா தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு இருந்த நிலையில், ஆணவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.