புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக முதல்முறையாக சாந்திஸ்ரீ பண்டிட் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு (JNU) சாந்திஸ்ரீ பண்டிட் என்பவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர் இந்த பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சாந்திஸ்ரீ பண்டிட் ஏற்கனவே புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழக்கத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இவர் ஜே.என்.யு பல்கலையின் முன்னாள் மாணவர் ஆவார்.
ஜே.என்.யு., பல்கலைக்கழகத்தில் சாந்திஸ்ரீ எம்.பில் மற்றும் பி.எச்டி படித்துள்ளார். 1988ல் கோவா பல்கலையில் தனது ஆசிரியர் பணியை துவக்கிய சாந்திஸ்ரீ, 1993ல் புனே பல்கலைக்கு மாறினார். அவர் பல்வேறு கல்வி அமைப்புகளில் நிர்வாக பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.