விமானத்தில் அமர்ந்திருந்த காங்கிரஸ் பிரமுகர் கைது : கீழே இறக்கி அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்!!

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன் கேரா, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது அசாமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் சத்தீஸ்கரில் நடக்கும் காங்., மாநாட்டிற்காக செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்த அவர் இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தார்.

அவரை கைது செய்வதற்காக அசாம் போலீசார் விமான நிலையம் வந்தனர். விமான நிலைய அதிகாரிகளிடம் எப்ஐஆர்., தகவலை காண்பித்தனர்.

தொடர்ந்து போலீசார் கேட்டு கொண்டதால், பவன் கேரா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக பவன் கேரா கூறுகையில், விமான ஊழியர்கள், என்னிடம் வந்து, எனது பையில் பிரச்சினை உள்ளது என்றும், கீழே இறங்க கூறினர். என்னிடம் பை இல்லை எனக்கூறியதும், உங்களுக்கு விமானத்தில் செல்ல அனுமதி இல்லை. போலீஸ் அதிகாரி வந்து சந்திப்பார் எனக்கூறி கீழே இறக்கிவிட்டனர் என்றார்.


இதனையடுத்து, பவன் கேராவுடன் சத்தீஸ்கர் செல்லவிருந்த காங்கிரசார், விமானத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து துணை ராணுவப்படையினர் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். விமானம் கிளம்பி செல்வதில் தாமதம் ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் முன் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய பவன்கேராவுக்கு அனுமதி மறிக்கப்பட்டதால் சுர்ஜேவா, வேண்டுகோபால் உள்ளிட்டோரை சத்தீஸ்கர் செல்லவிருந்த விமானம் முன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.