விமானத்தில் அமர்ந்திருந்த காங்கிரஸ் பிரமுகர் கைது : கீழே இறக்கி அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2023, 8:54 am
congress Arrest -Updatenews360
Quick Share

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன் கேரா, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது அசாமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் சத்தீஸ்கரில் நடக்கும் காங்., மாநாட்டிற்காக செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்த அவர் இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தார்.

அவரை கைது செய்வதற்காக அசாம் போலீசார் விமான நிலையம் வந்தனர். விமான நிலைய அதிகாரிகளிடம் எப்ஐஆர்., தகவலை காண்பித்தனர்.

தொடர்ந்து போலீசார் கேட்டு கொண்டதால், பவன் கேரா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக பவன் கேரா கூறுகையில், விமான ஊழியர்கள், என்னிடம் வந்து, எனது பையில் பிரச்சினை உள்ளது என்றும், கீழே இறங்க கூறினர். என்னிடம் பை இல்லை எனக்கூறியதும், உங்களுக்கு விமானத்தில் செல்ல அனுமதி இல்லை. போலீஸ் அதிகாரி வந்து சந்திப்பார் எனக்கூறி கீழே இறக்கிவிட்டனர் என்றார்.


இதனையடுத்து, பவன் கேராவுடன் சத்தீஸ்கர் செல்லவிருந்த காங்கிரசார், விமானத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து துணை ராணுவப்படையினர் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். விமானம் கிளம்பி செல்வதில் தாமதம் ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் முன் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய பவன்கேராவுக்கு அனுமதி மறிக்கப்பட்டதால் சுர்ஜேவா, வேண்டுகோபால் உள்ளிட்டோரை சத்தீஸ்கர் செல்லவிருந்த விமானம் முன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 238

0

0